10, 11 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் தேர்ச்சி !!!!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம், புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல்பாஸ் என அரசு அறிவித்தது. ஆல்பாஸ் அறிவிப்பால் மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், வருகை பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் இல்லாத காரணத்தாலும், 50 % மாணவர்கள் தேர்ச்சி பெறாததாலும் ஆசிரியர்கள் குழம்பி இருந்தனர். இந்நிலையில் அரசு எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மீண்டும் நடந்த காலாண்டுதேர்வு ??
போச்சம்பள்ளி மத்தூர் அரசு பெண்கள் பள்ளியை சேர்ந்த 15 மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுவதால், விடைத்தாள்கள் தொலைந்த மாணவிகளுக்கு பள்ளிக்கு அருகில் உள்ள டியூசென் சென்டரில் வைத்து மறு தேர்வு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் இது போன்று ஏற்கனவே பல மாணவிகளுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டதாகவும் புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் தேர்ச்சி:
இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், 10,11 ஆம் வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் தேர்ச்சி தான் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தேர்ச்சி விவரத்தை உடனே தெரிவிக்கவேண்டும் என்று உயர் நிலை, மேல்நிலை தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.