ரயில்வே துறையில் 1.49 லட்சம் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான அறிவிப்புகளும் இதற்கான நிதி ஒதுக்கீடுகளும் இடம்பெற்றுள்ளது. மேலும் தற்போது ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
ரயில்வே காலிப்பணியிடங்கள்
இந்தியாவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆண்டுக்கு 3 முறை நடைபெறுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்றது. இதில் முதற்கட்டமாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 11ம் தேதியுடன் முதல் அமர்வு முடிவுக்கு வந்தது. மேலும் 2வது அமர்வு பிப்ரவரி மாதத்திற்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மார்ச் 28, 29 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!
இந்த நிலையில் 5 மாநிலத்திற்கும் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி வரை நடைபெற்றது. அதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மார்ச் 14ம் தேதி முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த 2வது அமர்வு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் உக்ரைன் விவகாரம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தாவது, இந்தியாவில் அனைத்து மண்டலங்களிலும் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக வடக்கு ரயில்வே துறையில் 19,183 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் தெற்கு ரயில்வே துறையில் 17,022 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன் மத்திய ரயில்வே துறையில் அதிகபட்சமாக 1.49 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.