மார்ச் 28, 29 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குதல் மற்றும் ஐந்து நாள் மட்டும் வேலைநாளாக அமல்படுத்த கோரி வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
வேலைநிறுத்தப் போராட்டம்:
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. பொதுத்துறை வங்கிகள் தான் அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் அனைத்தும் நாட்டின் கடைகோடி மக்களுக்கு சென்றடைய பாலமாக இருந்து வருகிறது. அப்படி பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டால் இத்தகைய நலத் திட்டங்கள் மக்களுக்கு சென்றடையாது.
இனி 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நீக்கம்? மத்திய அரசு விளக்கம்!
இதனால் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதற்கு எதிராகவும், எல்.ஐ.சி ஊழியர்களைப் போலவே வாரத்தில் ஐந்து நாள் வேலையை அமல்படுத்த வேண்டியும் மார்ச் 28 மற்றும் மார்ச் 29 ஆகிய இரு தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் உள்ளிட்ட பல சங்கத்தினர் கலந்துகொள்ள உள்ளனர். ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால் மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மாற்றுவழிகள் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வங்கிச் சேவைகள் குறைந்தளவு பாதிக்கப்படக் கூடும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.