வல்லப சைனிக் பள்ளி மதுரையில் துவக்கம்

0
வல்லப சைனிக் பள்ளி மதுரையில் துவக்கம்
வல்லப சைனிக் பள்ளி மதுரையில் துவக்கம்

வல்லப சைனிக் பள்ளி மதுரையில் துவக்கம்

மதுரை மாவட்டத்தில் புதிய கல்வி முயற்சியாக ‘வல்லப சைனிக் பள்ளி’ இன்று தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஒழுக்கம், நாட்டுப்பற்றும், தலைமைத்துவ திறனையும் வளர்க்கும் நோக்கில் இந்த பள்ளி நிறுவப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை அனுமதியுடன் தொடங்கப்பட்ட இப்பள்ளி, தேசிய அளவிலான சைனிக் பள்ளிகளின் தரத்துக்கு இணையாக அமைந்துள்ளது. ஆரம்ப கட்டமாக ஆறாம் வகுப்பு முதல் சேர்க்கை வழங்கப்பட்டு, நவீன கல்வி வசதிகள், விடுதி வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்தும் மாணவர்களுக்காக தயாராக உள்ளது.

போட்டி தேர்வுகளில் மூன்றாம் பாலினத்தவர் ‘மிஸ்சிங்’

இந்த பள்ளியின் துவக்க விழாவில் உள்ளூர் அதிகாரிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு ஒழுக்கம், உடற்கல்வி, மற்றும் அறிவியல் அடிப்படையிலான கல்வி மூலம் இராணுவம் போன்ற உயர்ந்த துறைகளில் சேர்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்ட மாணவர்களுக்கு இந்த சைனிக் பள்ளி ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!