பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகுமா? 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு
மாணவர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை (Public Exam Timetable) இந்த மாதத்திலேயே வெளியாகும் என கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நடைபெறும் இந்த தேர்வுகளுக்கான தயாரிப்பு பள்ளிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மாதிரி தேர்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் மூலம் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர்.
சீர்குலைகிறது கோவை வேளாண் பல்கலை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு
இதனை முன்னிட்டு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் பொதுத்தேர்வு அட்டவணை வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். கல்வித்துறை அதிகாரிகள், “அட்டவணை தயாரிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது; விரைவில் வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளனர். அட்டவணை வெளியிடப்பட்டவுடன், தேர்வு தேதிகள், இடைவேளைகள், மற்றும் விடுமுறை நாட்கள் குறித்து தெளிவான தகவல்கள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.


























