IPL சீசன் 15: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக யுஸ்வேந்திர சாஹல் நியமனம்? ரசிகர்கள் குழப்பம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் IPL 2022ன் புதிய கேப்டனாக யுஸ்வேந்திர சாஹலை அறிவித்து ஒரு பதிவு வெளியாகி ரசிகர்களிடையே சில குழப்பங்கள் ஏற்பட்டுத்தி இருந்தது. இதற்கான உண்மை நிலவரம் என்னவென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
யுஸ்வேந்திர சாஹல்
வரும் மார்ச் 26ம் தேதியுடன் துவங்க இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டிகளின் 2022 சீசனுக்காக ஒவ்வொரு அணிகளும் கடுமையான பயிற்சிகளுடன் தங்களை தயார் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது IPL போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் புதிய ஜெர்சி நேற்று (மார்ச்.15) வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் புதிய கேப்டனாக யுஸ்வேந்திர சாஹல் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்களிடையே பல்வேறு குழப்பங்களை உருவாக்கியது. இந்த அறிவிப்புக்கு பின்பாக இருக்கும் உண்மை நிலவரத்தை கவனித்து பார்க்கையில், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) ட்விட்டர் கணக்கில் யுஸ்வேந்திர சாஹல் தனது பெயரை கேப்டனாக அறிவித்துள்ளது தெரிய வந்தது. இப்போது யுஸ்வேந்திர சாஹல் விளையாட்டாக செய்துள்ள இந்த விஷயம் குறித்து அவர் கூறும் போது, RR அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிற்கான கடவுச்சொல் தன்னிடம் இருப்பதாகவும், அதை பயன்படுத்தி வேடிக்கை காட்ட இப்படி செய்ததாகவும் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.
மீண்டும் ஊரடங்கு அமல் – கொரோனா பரவல் எதிரொலி! மருத்துவகுழு அமைக்கும் பணி தீவிரம்!
இதற்கிடையில் RR அணியின் உண்மையான கேப்டன் சஞ்சு சாம்சன் கூட சாஹலை வாழ்த்தி அந்த ட்விட்டர் பதிவுக்கு கமெண்ட் செய்ய, அதற்கு RR கணக்கில் இருந்து பொறாமை என்று பதில் வந்துள்ள பதிவுகளும் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. இதற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியில் இருந்து விலக்கப்பட்ட சாஹல் ஐபிஎல் 2022 ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு சொந்தமானார். இந்தியன் பிரீமியர் லீக்கில் மிகவும் வெற்றிகரமான லெக்-ஸ்பின்னர்களில் ஒருவராக திகழும் சாஹல், 114 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 7.59 என்ற எகானமியுடன் 139 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.