தமிழகத்திற்கு இன்று ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி!

0
தமிழகத்திற்கு இன்று 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி!
தமிழகத்திற்கு இன்று 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி!
தமிழகத்திற்கு இன்று ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி!

தமிழகம், கேரளா, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் தமிழகம், ஆந்திர பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்த மூன்று மாநிலத்திற்கும் “மஞ்சள் அலர்ட்” விடுக்கப்பட்டு உள்ளது.

“மஞ்சள் அலர்ட்” எச்சரிக்கை:

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் நேற்று மழை குறைந்த அளவில் பெய்த நிலையில், இன்று மீண்டும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதாவது வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும் ஒடிசா கடல் பகுதி அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த தாழ்வு பகுதி மேலும் வலிமை அடையும்.

Post Office திட்டத்தில் இணைய விருப்புவோருக்கான புதிய திட்டம் – முழு விவரங்கள் இதோ!

மேலும் கடலில் இருந்து 7.6 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இதனால் ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அதிக மழை பெறும்.இதையடுத்து மேற்கு வங்கத்தில் தீவிர கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் தமிழ்நாட்டிற்கும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகம், ஆந்திர பிரதேசம், கேரளாவுக்கு இன்று “மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது”. இன்று இடி, மின்னல் அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் 50-60 கிமீ வேகத்தில் காற்று வீசும் வாய்ப்பு உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் இன்னொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இந்த சுழற்சி காரணமாக அரபிக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு படையினர் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!