Post Office திட்டத்தில் இணைய விருப்புவோருக்கான புதிய திட்டம் – முழு விவரங்கள் இதோ!
இந்திய அஞ்சல் துறையில் பல சிறப்பான பலன்களை வழங்கி வரும் கிசான் விகாஷ் பத்ரா அஞ்சல சேமிப்பு திட்டம் குறித்தான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் 100 செலுத்தி பன்மடங்காக பணத்தினை திரும்ப சேர்ந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post Office திட்டம்
இந்திய அஞ்சல் துறை நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வங்கிகளை காட்டிலும் அஞ்சல் துறையில் அதிகமான வட்டி வழங்கப்படுவதால் பலரும் அஞ்சல் திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், ஆபத்து இல்லாத மற்றும் நல்ல வருமானத்தை வழங்க கூடிய திட்டமாக போஸ்ட் ஆபிஸ் திட்டம் செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த இந்திய அஞ்சல் திட்டத்தில் மத்திய அரசின் திட்டம், இடர்பாடுகள் குறைவு, 80சி வருமான வரி விலக்கு என பல திட்டங்கள் இருக்கிறது.
Exams Daily Mobile App Download
தற்போது போஸ்ட் ஆபிஸ் திட்டத்திலேயே மிகவும் சிறப்பான ஒரு சேமிப்பு திட்டமாக கிசான் விகாஷ் பத்ரா அஞ்சல சேமிப்பு திட்டம் விளங்கி வருகிறது. அதாவது, இந்த சேமிப்பு திட்டத்தில் ஆண்டிற்கு 6.9 கூட்டு வரி வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தில் இணைந்த 124 மாதங்களில் இது வரைக்கும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யப்பட்டிருந்த பணம் இரட்டிப்பாக வழங்கப்படும். மேலும், முதலீட்டாளர்கள் குறைந்தப்பட்சமாக ரூ.100 செலுத்தி இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
மேலும், அதிகபட்சமாக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். மேலும், சேமிப்பு கணக்கை தனிநபர் அல்லது 10 வயது நிரம்பிய ஒருவருக்கு தனிக்கணக்கு தொடங்கி கொள்ளலாம். மேலும், 10 வயதிற்கும் குறைவாக உள்ள சிறுவர் பெயரில் பாதுகாவலர் கணக்கு தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கான முதலீட்டாளர் இறந்துவிட்டால் சட்டப்படி வாரிசுக்கு அந்த பணம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.