அறிமுகம் செய்த சேனலையே நிராகரித்த “யாரடி நீ மோகினி” நட்சத்திரா – ஷாக்கான ரசிகர்கள்!
ஜீ தமிழ் “யாரடி நீ மோகினி” சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நட்சத்திரா. அவர் அதே சேனலில் புதிய சீரியல் ஒன்றில் கமிட்டான நிலையில் அவர் எடுத்த முடிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
யாரடி நீ மோகினி:
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்த நிலையில், பல எபிசோடுகளை கடந்து வெற்றி கண்ட சீரியல்கள் இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடத்தில் இருக்கின்றது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி முடிந்த யாரடி நீ மோகினி சீரியலை இன்னும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அந்த சீரியலில் வெண்ணிலா முத்தரசை துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சிகள் அனைத்தும் TRPயில் முன்னிலையில் வர காரணமாக இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இந்த சீரியலின் கிளைமேக்ஸ் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு முடிந்தது.
ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ ஷபானாவுக்கு நேர்ந்த சோகம் – நண்பர்களை பற்றி உருக்கமான பதிவு! ரசிகர்கள் ஷாக்!
வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்த நட்சத்திரா இந்த சீரியலில் தான் அறிமுகம் ஆனாலும் அவருடைய நடிப்பு திறமையால் பல ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். நட்சத்திரா யாரடி நீ மோகினி சீரியலுக்கு பின் ‘தெய்வம் தந்த பூவே’ என்ற புதிய சீரியலில் கமிட்டானாராம். அந்த சீரியலுக்கான ஸ்க்ரீன் டெஸ்ட் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் ஹீரோவும் இறுதி செய்யப்பட்டு ஷூட்டிங் தேதியும் குறிக்கப்பட்டது. இந்நிலையில் சேனல் தரப்பில் இருந்து நட்சத்திராவுக்கு போன் செய்த நிலையில் அப்போது அதிர்ச்சியான பதிலை நட்சத்திரா சொல்லி இருக்கிறார்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் சுசித்ரா யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
அது குறித்து அவர் கூறுகையில் நீங்க கொடுப்பதாக சொன்ன சம்பளத்தை விட மூன்று மடங்கு சம்பளம் வேறு சேனலில் தருவதால் அங்கே கமிட்டாகி விட்டேன் என சொன்னதால் சேனல் மற்றும் தயாரிப்புத் தரப்பில் அதிர்ச்சி அடைந்தனர். வளர்த்து விட்ட எங்ககிட்டயே நல்ல பிசினஸ் டீல் பண்றீங்களே என்ற சேனல் தரப்பு பரவாயில்லை அங்கேயே நீங்க பண்ணுங்க என பின் வாங்கி கொண்டனர். தற்போது நட்சத்திரா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வள்ளி திருமணம் தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.