தமிழகத்தில் காவலர்களின் வாரிசுகளுக்கு வேலை – 912 பேருக்கு பணி ஆணை!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பணிகாலத்தில் இறக்கும் போது அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும். அந்த வகையில் பணியின் போது இறந்த காவலர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.
பணி ஆணை வழங்கல்
தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு துறை வாரியாக மானிய கோரிக்கை நடைபெற்றது. அதன்படி ஒவ்வொரு துறையிலும் பல நலத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் காவல்துறையில், காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை மேற்கொள்ள வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுவாக அரசு பணியாளர்கள் பணிக்காலம் முடிவடைவதற்குள் இறந்துவிட்டால் அவரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அந்த பணியிடம் வழங்கப்படும்.
அதன்படி வரவேற்பாளர்கள் பணியிடத்திற்காக பணியின் போது மறைந்த காவலர்களின் வாரிசுகள் 1132 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி இது தொடர்பாக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக இன்று 8 பேருக்கு பணியின் போது காலமான காவலர்களின் வாரிசுகளுக்கு “காவல் நிலையத்தில் வரவேற்பாளர்கள்” பணியிடத்திற்கான பணி ஆணைகளை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார்.
தமிழக அரசு கேபிள் டிவி பயன்படுத்துபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அறிவிப்பு!
அத்துடன் தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 457 ஆண்கள் மற்றும் 455 பெண்கள் என மொத்தமாக 912 வாரிசுதாரர்களுக்கு பணியிடத்திற்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் காவல்நிலையங்கள் மற்றும் ரயில்வே காவல் நிலையங்களில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் மூலமாக பொதுமக்களிடம் குறைகள் கேட்கப்பட்டு உடனடியாக குறைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்