விஜய் டிவி ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் கேப்ரில்லா யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கேபிக்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த சமயத்தில் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் ஒப்பந்தமானார். இந்த சீரியலிலும் தனது நடிப்பு திறமையை காட்டி ரசிகர்களை மிரள செய்து வருகிறார்.
கேப்ரில்லா:
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக 3 திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் கேப்ரியலா. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சென்னையில் ஒரு நாள் போன்ற சில திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேபிக்கு நடனத்தின் மீது அதிகமான ஆர்வம் இருப்பதால் அனைத்து நடன நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார். ஜோடி ஜூனியர் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வெற்றியும் பெற்றார். இதற்குப்பிறகு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள கேபிக்கு வாய்ப்பு கிடைத்தது.
Exams Daily Mobile App Download
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கடைசி வரைக்கும் தாக்குப்பிடித்து இறுதியாக பண பெட்டியுடன் வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அனைத்து போட்டியாளர்களுக்குமே பல பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், கேபிக்கு எந்த படவாய்ப்புகளும் வராத காரணத்தினால் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே சீசன்2 தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆரம்பத்தில் கேபி சீரியலில் ஒப்பந்தமானதை வைத்து ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். ஆனால், தற்போது ஈரமான ரோஜாவே சீரியல் டாப் ரேஞ்சில் சென்று கொண்டிருப்பதால் ரசிகர்களின் பெயரையும் புகழையும் கேப்ரில்லா வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்.
17 வயதிலேயே கர்ப்பமான நடிகை அனிகா சுரேந்தர்? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
ஆரம்பத்தில் கேபிக்கு நடனத்தின் மீது மட்டுமே ஆர்வம் உள்ளதாக ரசிகர்கள் எண்ணிக் கொண்டு இருந்தனர். ஆனால் ஈரமான ரோஜா சீரியல் மூலமாக கேப்ரில்லாவின் நடிப்பை கண்டு ரசிகர்கள் மிரண்டு போய் இருக்கின்றனர். ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் கூட சூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலே இருந்து வருகிறார். சமீபத்தில்கூட கேபி தனக்கு சொந்தமாக சொகுசு கார் ஒன்றை வாங்கினார். திரைப்பட வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் கேபிக்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.