விஜய் டிவி ‘ராஜா ராணி’ சீசன் 2 நடிகை ரியாவின் காதலர் யார் தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்!
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி 2 தொடரில் ரியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவரின் காதலன் யார் என்பது குறித்தான தகவல் இணையத்தில் லீக்காகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ராஜா ராணி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது புதிதாக ராஜா ராணி தொடரில் சந்தியா கதாபாத்திரத்திற்கு ரியா என்ற புதுமுக நடிகை அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் சந்தியா கதாபாத்திரத்தில் ஆலியா நடித்து வந்தார். பிரசவத்திற்காக ஆலியா சீரியலில் இருந்து விலகினார். ஆலியா கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் ராஜா ராணி சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார்.
Exams Daily Mobile App Download
மேலும், பிரசவத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பாகவே ராஜா ராணி சீரியலில் இருந்து விலகினார். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சந்தியா கதாபாத்திரத்திற்கு திரும்பி வந்து விடுவேன் என கூறிவிட்டு தான் சென்றார். தற்போது ஆலியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ரியா மட்டுமே இனி சந்தியா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பார் எனக் கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். ஆரம்பத்தில் ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நாளடைவில் ரியாவையும் சந்தியா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர்.
தற்போது ராஜா ராணி 2 சீரியலும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அதாவது பார்வதி திருமணம் நடைபெறுமா அல்லது விக்கி திருமணத்தை நிறுத்தி விடுவாரா என விறுவிறுப்பாக சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி கேட்டு அதற்குரிய பதிலை கூறுவது போன்று ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இவ்வளவு அழகாக இருக்கீங்க உங்களை உஷார் பண்றதுக்கு டிப்ஸ் கொடுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு ரியா பிரதர் எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு என நக்கலாக கூறியுள்ளார். ஒரு வேளை பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால் தான் காதலனாக இருப்பாரோ என சந்தேகம் எழுந்துள்ளது.