மீண்டும் தன்னுடன் படிக்கும் மாணவனை காதலிக்க துவங்கிய இனியா – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் புதிய திருப்பம்!
ராதிகா, பாக்கியா தான் கோபியின் மனைவி என்பதை தெரிந்து கொள்வாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் தற்போது மீண்டும் இனியா பழையபடி காதல் லீலைகளை தொடங்குவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியாவிற்கு கோபியை பற்றிய உண்மைகள் தெரிய வருமா அல்லது பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போகிறாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ராதிகாவும் பாக்கியாவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதால் எப்படியாவது இருவரையும் பிரித்தே தீர வேண்டும் என பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.
“பாரதி கண்ணம்மா” சீரியல் வில்லி பரீனாவின் மகனா இது? வைரலாகும் குடும்ப புகைப்படம்!
இதற்கு நடுவே ராதிகாவைத் தான் கோபி திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்கிற விஷயம் கோபியின் அப்பாவான ராமமூர்த்திக்கு தெரியும். ஆனால், கோபியை கண்டித்த போது பாக்கியாவை விவாகரத்து செய்துவிடுவேன் என மிரட்டியதால் கோபியை அப்படியே விட்டு வருகிறார். இருப்பினும், கோபியின் ஆட்டம் அடங்குவதாக தெரியவில்லை. இதனால் வீட்டில் பாக்கியாவும் கோபியும் இருக்கும்படியான புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். ராதிகாவின் வீட்டிற்கு ராமமூர்த்தி தாத்தா செல்வதற்குள் ராதிகா வீட்டை காலி செய்து வேறு ஒரு வீட்டிற்கு சென்று விடுகிறார்.
Exams Daily Mobile App Download
எப்படியாவது ராதிகா வீட்டை கண்டுபிடித்து உண்மையை கூறியே தீரவேண்டும் என தாத்தா காத்துக்கொண்டிருக்கிறார். எப்படி ராதிகாவிடம் ராமமூர்த்தி தாத்தா உண்மையை கூற போகிறார் என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் இனியா மீண்டும் தனது காதல் லீலைகளை ஆரம்பித்து விடுகிறார். ஏற்கனவே இனியா பள்ளியில் தன்னுடன் படித்துக் கொண்டிருக்கும் மாணவனின் வீட்டிற்குச் சென்று ஒரு மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தினார். பள்ளி முதல்வர்கள் அனைவரும் இதற்கு மேல் இந்த மாதிரி செய்யக்கூடாது என எச்சரித்து விட்டுவிட்டனர். தற்போது மீண்டும் அந்த மாணவனை இனியா காதலிப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதற்கு பிறகு பாக்கியலட்சுமி தொடரில் என்னென்ன திருப்பங்கள் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.