INCOIS நிறுவனத்தில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை – வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
ESSO- கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS) கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் Technical Personnel ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில் இப்பதவிக்கு என மொத்தமாக 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இப்பதிவில் எளிமையாக தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- ESSO- கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தில் காலியாக உள்ள Technical Personnel Grade II பணிக்கு என 08 இடமும், Technical Personnel Grade I பணிக்கு என 12 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- Technical Personnel பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Engineering, Technology போன்ற பாடப்பிரிவுகளில் Diploma, B.Sc Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை அனுபவம் வைத்து இருப்பவராக இருக்க வேண்டும்.
- Technical Personnel Grade II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராகவும், Technical Personnel Grade I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
- Technical Personnel Grade – II பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.50,000/- மாத ஊதியமாகவும், Technical Personnel Grade – I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.39,000/- மாத ஊதியமாகவும் பெறுவார்கள்.
Join Our TNPSC Coaching Center
- Technical Personnel பணிக்கு தகுதி உள்ள நபர்கள் 05.05.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
INCOIS விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.