தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 10 சிம்பிள் ஸ்டெப்ஸ்!
நாளை மே 5ம் தேதி 12ம் வகுப்பு மற்றும் மே 6ம் தேதி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்க இருக்கிறது. இதனால் மாணவர்கள் அனைவரும் பதட்டத்துடன் இருக்கின்றனர். மாணவர்கள் தேர்வு மையங்களில் எப்படி பதற்றம் இல்லாமல் இருப்பது என்பது குறித்து 10 வழிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.
கடைபிடிக்க வேண்டியவை
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 2 வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தி வந்தனர். பொதுத் தேர்வுகள் ஏதும் நடத்தாமலே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்த வருடம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் கண்டிப்பான முறையில் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத் தேர்வு எழுத இருக்கும் நிலையில் மாணவர்கள் பதட்டத்துடன் உள்ளனர். அதனால் பதட்டத்தை போக்கும் வகையில் சில விஷயங்களை நீங்கள் முன்கூட்டியே பின்பற்ற வேண்டியது அவசியம். அந்த வகையில் நீங்கள் பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள் எனில் இந்த 10 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுங்கள்.
தமிழகத்தில் பொதுத்தேர்வு பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு!
தேர்வுக்கு தயாராகும் முன் பாடத்திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள். பின்னர் படிக்கும் இடத்தை தேர்வு செய்யவும், ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுங்கள் , வழக்கமான இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள், முறையான தூக்க முறையை கடைப்பிடிக்கவும், எப்போதாவது குழுக்களாக இணைந்து படிக்கவும், முழுவதையும் படித்து சுருக்கமான குறிப்புகளை உருவாக்கவும், முந்தைய ஆண்டுகளின் தேர்வு வினாத்தாள்களையும் படிக்கவும், மீண்டும் மறுபரிசீலனை செய்யுங்கள், தேர்வு நாளை திட்டமிடுங்கள் ஆக மொத்தம் 10 வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.