தமிழகத்தில் பொதுத்தேர்வு பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் பொதுத் தேர்வு மையத்திற்கு ஆசிரியர்கள் செல்போன் எடுத்துவர அரசு தேர்வுகள் இயக்ககம் தடை விதித்துள்ளது.
செல்போனுக்கு தடை:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தாக்குதலுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெறத் தொடங்கியது. இந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதனையடுத்து மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில் திருப்புதல் தேர்வும் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 10,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியானது. அதில் அதில் 12ம் வகுப்பிற்கு மே 5ம் தேதி முதல் பொதுத்தேர்வும் 10ம் வகுப்பிற்கு மே 6ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோருக்கு சூப்பர் அறிவிப்பு – செயலி அறிமுகம்!
இந்த நிலையில் விரைந்து பாடங்களை நடத்தி முடித்து மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. கடந்த 25ம் தேதி பொதுத்தேர்வுக்கான செய்முறைத் தேர்வு தொடங்கி மே 2ம் தேதி வரை நடைபெற்றது. அடுத்ததாக நாளை முதல் 12ம் வகுப்புகளுக்கு பொதுதேர்வு தொடங்க உள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் தேர்வு மையங்களை தயார்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுத்தேர்வு வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதில் பொதுத் தேர்வு மையத்திற்கு ஆசிரியர்கள் செல்போன் எடுத்து வர தடை விதித்துள்ளது. பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால், தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும் பொதுத் தேர்வில் காப்பியடித்தால் அந்த மாணவர்கள் மாணவர் 1 ஆண்டுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாணவர்கள் காப்பியடிப்பதற்கு பள்ளி நிர்வாகம் துணை புரிந்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.