பள்ளி மாணவர்களுக்கு 48 நாட்கள் கோடை விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
நாடு முழுவதும் வெப்பம் வெகுவாக அதிகரித்து வருகிறது. வழக்கமான காலத்திற்கு முன்பாகவே வெப்பம் அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் மாணவர்களின் நலன்கருதி கோடை விடுமுறை முன்னதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய கல்வி துறை கட்டுப்பாட்டில் செயல்படும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இன்று முதல் ஜூன் 20ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோடை விடுமுறை:
உலக மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக, இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும்,கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் மாதாந்திர தேர்வு, காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இருப்பினும் நடப்பு ஆண்டில், ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. பள்ளி வேலை நாட்கள் குறைவாக இருந்ததால், சனிக்கிழமைகளிலும் விடுமுறை இன்றி பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என்பதில், பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக உள்ளது. இந்நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு, இன்று முதல் 48 நாட்கள், கோடை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கேந்திரிய வித்யாலயா, பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு, முன்னுரிமை அளித்து, இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
INCOIS நிறுவனத்தில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை – வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கே.வி.பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மட்டும், இரண்டாம் பருவ தேர்வுகள் நடந்து வருகின்றன. மற்ற மாணவர்களுக்கு, புதிய கல்வி ஆண்டு வகுப்புகளும் தொடங்கி விட்டன. இந்த நிலையில் கோடை விடுமுறை மே 4ல் துவங்குவதாக, கே.வி.சங்கதன் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி ஜூன் 20 வரை, 48 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இந்த அறிவிப்பால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.