தமிழகத்தில் மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை பெற தகுதியானவர்கள் யார்? முழு விபரம் இதோ!
தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தற்போது இத்திட்டத்தில் உதவித்தொகை பெற தகுதியான கல்லூரி மாணவிகள் யார் யார் என்று பார்ப்போம்.
உதவித்தொகை
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு மாணவ, மாணவிகள் குடும்ப வறுமை காரணமாக படிப்பை விட்டு வேலைக்கு செல்கின்றனர். அதனால் தற்போது மாணவர்களிடையே இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அத்துடன் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்று செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இத்திட்டத்தை நடப்பு ஆண்டு முதல் அமல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1000 வரை உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்தின் கீழ் இளங்கலை படிப்பை படிக்கும் மாணவிகள் மட்டுமே பயன்பெற முடியும். அத்துடன் முதுகலை படிப்பை படிக்கும் மாணவிகள் பயன்பெற முடியாது. இதையடுத்து தொலைதூரக்கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கும் இத்திட்டம் பொருந்தாது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற விரும்பும் மாணவிகள் 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
மத்திய அரசின் “அக்னிபாத்” திட்டத்திற்கு குவியும் விண்ணப்பங்கள் – ஜூலை 5 கடைசி நாள்!
தற்போது இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியான கல்லூரி மாணவர்களை பற்றி தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
1. இந்த திட்டத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தமிழகத்திலே உயர்கல்வியில் சேரும் மாணவிகள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1. தனியார் பள்ளியில் ஆர்.டி.இ கீழ் 6 முதல் 8ம் வகுப்பு வரை படித்து அதன் பின்பு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
2. அரசு பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி, பழங்குடியினர் நலன், கள்ளர் சீர்மரபினர் உள்ளிட்ட பள்ளிகளில் படித்து தமிழகத்தில் உயர்கல்வியில் சேரும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
3. மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வனத்துறை, சமூகப் பாதுகாப்புத்துறை பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
4. மேலும் இளங்கலை பட்டப்படிப்பில், 2ம் ஆண்டு படிக்கும் மாணவிகள், 3ம் ஆண்டுக்கு படிக்கும் மாணவிகள் இதில் பயன் பெறலாம்.
5. அத்துடன் தொழிற்கல்வியில் 4ம் ஆண்டுக்கு செல்லும் மாணவிகள், மருத்துவக்கல்வியில் 5ம் ஆண்டுக்கு செல்லும் மாணவிகளும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.