தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமல்? எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்!

0
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமல்? எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்!
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமல்? எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்!
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமல்? எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போதைய அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்குமா என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

பழைய ஓய்வூதியம்:

தமிழகத்தில் 2003ம் ஆண்டு வரை பழைய பென்ஷன் திட்டம் அமலில் இருந்தது. பின்பு 2004ம் ஆண்டு முதல் சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இருப்பினும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஏனெனில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நமது பணத்தில் தேவைப்படும் பொது கடன் பெற்றுக்கொள்ளலாம். இந்த கடனுக்கு வட்டி கிடையாது. ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இந்த சலுகை கிடையாது.பழைய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப பாதுகாப்பு நிதியாக 50,000 ரூபாய் கிடைக்கும். இந்த பணம் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தில் கிடைக்காது.

TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – ஜூலை 24ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!

அரசு ஊழியர்கள் தங்களது பணி ஓய்வு பெற்ற பிறகு அவர்கள் வாங்கிய கடைசி ஊதியத்தில் 50% தொகையானது பென்ஷனாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். புதிய ஓய்வூதிய திட்டமான பங்களிப்பு திட்டத்தில் பணத்தை கொடுத்து விட்டார்கள் என்றால் பின்னர் எதுவும் கிடைக்காது என்று கூறப்படுகிறது. மேலும் ஓய்வூதியதார்கள் இறந்து விட்டால் அவர்களின் மனைவி அல்லது கணவனுக்கு 50% தொகையானது தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். பழைய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப நிதியாக 50,000 ரூபாய் கிடைக்கும். ஆனால் பங்களிப்பு திட்டத்தில் இது கிடையாது.

Exams Daily Mobile App Download

பழைய ஓய்வூதிய திட்டத்தில் விருப்ப ஓய்வூதிய திட்டம், இயலாமை ஓய்வூதிய திட்டம், கட்டாய ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம், ஈடுகட்டும் ஓய்வூதியம் போன்ற நல்ல திட்டங்கள் இருந்தன. ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் அந்த பலன்கள் இல்லை என்று அரசு ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதே போல் பழைய ஓய்வூதிய திட்டத்தில் மாதாந்திர மருத்துவ படி 300 ரூபாய் கிடைக்கும் ஆனால் பங்களிப்பு திட்டத்தில் இந்த பணம் கிடைக்காது. இந்த காரணங்களால் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தற்போதைய அரசு பழைய பென்ஷன் திட்டம் கொண்டுவருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அந்த திட்டத்தை அரசானது விரைந்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!