CBSE, CISCE பொதுத்தோ்வுக்கான முடிவுகள் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ வாரியத்தின் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. தற்போது எப்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
தேர்வு முடிவுகள்
இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர நடத்தப்படவில்லை. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கல்வி வாரியங்கள் திட்டமிட்டது. அதன்படி சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ கல்வி வாரியம் பொதுத் தோ்வுகளை இரண்டு பருவங்களாகப் பிரித்து நடத்த முடிவு செய்தது.
Exams Daily Mobile App Download
மேலும், கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தாமதமாகத் தான் கல்வியாண்டு தொடங்கப்பட்டதால் பொதுத்தேர்வுகளும் தாமதமாக நடத்தப்பட்டது. இதில் குறிப்பாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தோ்வு கடந்த மே 24ம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தோ்வு ஜூன் 15ம் தேதியும் முடிவடைந்துள்ளது. இதே போல் சிஐஎஸ்சிஇ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தோ்வு கடந்த மே 20ம் தேதி மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தோ்வு ஜூன் 13ம் தேதியும் திட்டமிட்டபடி நடைபெற்றது. தற்போது மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால் சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ மாணவர்களுக்கும் மட்டும் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் உள்ளது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மத்திய கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பொதுத்தேர்வு வெளியிடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் தேர்வு முடிவுகள் வருகிற ஜூலை 15ம் தேதி அன்று வெளியாகலாம் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்கள்.