தமிழகத்தில் 13,331 தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கும் முறை & சம்பளம் குறித்த விவரம்!
தமிழகத்தில் தற்போதைக்கு 13, 331 ஆசிரியர்களை காலிப் பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில் எப்படி இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது என்பது குறித்தும், சம்பள விவரங்கள் குறித்தான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள்:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 13, 331 இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. எப்போதும் இந்த காலிபணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி வாரியத்தின் அடிப்படையில் தான் நிரப்பப்பட்டு வருகின்றன. மேலும், ஆசிரியர் தகுதி வாரியத்தின் அடிப்படையில் நிரப்ப காலதாமதம் ஆகும் என்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு பணியிடங்கள் நிரப்பப்படலாம் என அரசு முடிவெடுத்துள்ளது.
Exams Daily Mobile App Download
தற்போது யார் யாரெல்லாம் இந்த தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், எவ்வளவு சம்பளம் வழங்கப்பட உள்ளது எனவும், காலிப்பணியிடங்களை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பது குறித்தான அனைத்து விளக்கமும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் ஏற்கனவே பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 7, 500 ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 10,000ம், முதுநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய் 15,000 மும் மாத சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Airtel & Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் இதோ!
மேலும், இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புபவர்கள் வட்டார கல்வி அலுவலரை அலுவலகத்தில் தொடர்புகொண்டு எந்தெந்த பகுதியில் காலிப் பணியிடங்கள் உள்ளன என்பதனை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உங்களுக்கு அருகிலுள்ள பள்ளியிலேயே காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை அறிந்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தை அணுகி விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.