தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? அரசின் திட்டம் என்ன? தீவிரமடையும் கொரோனா பரவல்!

0
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? அரசின் திட்டம் என்ன? தீவிரமடையும் கொரோனா பரவல்!
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? அரசின் திட்டம் என்ன? தீவிரமடையும் கொரோனா பரவல்!
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? அரசின் திட்டம் என்ன? தீவிரமடையும் கொரோனா பரவல்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் பள்ளிகளை மீண்டும் மூடப்படக்கூடிய என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசு எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்த விவரங்களை இப்பதிவில் விரிவாக காண்போம்.

பள்ளிகள் மூடல்

தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு முதல் காணப்பட்டு வரும் கொரோனா பேரலைத்தொற்று தாக்கத்திற்கு மத்தியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டு அவ்வப்போது திறக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2022 ஜனவரி மாதத்தில் உருவான கொரோனா 3ம் அலைக்கு பிற்பாடு அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் வழக்கம் போல பள்ளிகள் அனைத்தும் ஆப்லைன் முறையில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளும் கூட ஆப்லைன் முறையில் நடத்தப்பட இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் தமிழகத்தில் பொதுத் தேர்வு முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த வருடம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே மாதம் 6 ஆம் தேதி முதல் பொதுத் தேர்வுகளும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 5ம் தேதி முதல் தேர்வுகளும் துவங்க இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு நாளும் 2000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கூட கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் இரட்டை இலக்கங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொது மக்கள் அனைவரும் முகக்கவசங்களை அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், கொரோனா பரவலை கவனத்தில் கொண்டு தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா என்ற கேள்விகள் எழுந்திருக்கிறது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இப்போது, தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதம் 13ம் தேதி கடைசி வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்புகள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழல் நீடித்தால் 1 முதல் 9 வரையுள்ள வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை மூடுவது குறித்து அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கிறது. மற்றபடி, பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்தலாம் என்றும் அரசுக்கு கோரிக்கைகள் எழுந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!