தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் தரமான பொருள்களை வழங்கப்படவில்லை, மேலும் கைரேகை வைப்பதில் சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகள் சம்மந்தப்பட்ட புகார்கள் அடிக்கடி வருகிற காரணத்தால் தடையின்றி பொருட்கள் வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரேஷன் கடைகளுக்கு அறிவிப்பு:
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய காரணமாக ரேஷன் கடைகள் இருக்கிறது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சமையல் பொருள்கள் மூலமாக பல வீடுகளில் சாப்பாடு தயாராகி வருகிறது. அது மட்டுமில்லாமல் அரசின் பல நலத்திட்டங்கள் அனைத்தும் ரேஷன் அட்டைகள் மூலமாகவே மக்களுக்கு வந்து சேர்க்கின்றனர். நாட்டின் முக்கிய ஆவணமாக ரேஷன் அட்டைகள் இருக்கிறது. தற்போது அமலில் இருக்கும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலமாக மக்கள் எந்த இடத்தில் இருந்தும் ரேஷன் பொருள்களை கை ரேகை மூலமாக வாங்கலாம்.
TN Job “FB Group” Join Now
ஆனால் ரேஷன் கடைகளில் தரமான பொருள்கள் கிடைப்பதில்லை எனவும், போதிய அளவு இல்லை என்பதால் பொதுமக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் கை ரேகை பல இடங்களில் வேலை செய்வது இல்லை என்பதாலும் மக்கள் பெரும் அவதி அடைகின்றனர். இதையே நம்பி இருக்கும் குடும்பங்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ரேஷன் கடைகளில் அடிக்கடி வந்த புகார் காரணமாக அந்த மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதன் படி வாடிக்கையாளர்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும், தரமற்ற அரிசியை, உடனடியாக கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். தரம் குறைந்த பொருட்களை கிடங்குகளில் இருந்து கடைக்கு அனுப்ப கூடாது. மேலும் ரேஷன் கடையில் கைவிரல் ரேகை பதிவாகவில்லை எனில் மீண்டும் ஐந்து நிமிட இடைவெளியில் மறு பதிவு செய்ய முயற்சி செய்ய வேண்டும். அப்படியும் வராமல் இருந்தால் பதிவேட்டில் பதிவு செய்து பொருட்கள் வழங்கலாம் அதற்காக ஒவ்வொரு கடையிலும் தனி பதிவேடு பராமரிக்க வேண்டும்.
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இன்னும் 2 நாட்கள் மட்டுமே!
ரேஷன் கடை தொடர்பான புகார்களுக்கு, தனி தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலரை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்த புகார்களுக்கு அவிநாசி – ராசு ( 98651 28733), தாராபுரம் – தேன்மொழி (94898 12051), காங்கயம் -ராஜேந்திரபூபதி (97503 75660), மடத்துக்குளம் – கவுரிசங்கர் (88380 76843), பல்லடம் – சையது ராபியம்மாள் (86674 15669), திருப்பூர் வடக்கு – தங்கவேல் (94878 55557), திருப்பூர் தெற்கு -தினேஷ்ராகவன் (98424 16961), உடுமலை – தயானந்தன் (99422 77555), ஊத்துக்குளி – மாறன் (95243 22010) என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.