“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் படப்பிடிப்பில் தனம் & கண்ணன் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தற்போது கதை அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. கடனால் வீட்டில் பிரச்சனை வர அதனால் கதிர் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அதனால் மூர்த்திக்கு நெஞ்சுவலி வர மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர். இப்படி சோகமான காட்சிகள் காட்டப்பட்டு வரும் நிலையில் படப்பிடிப்பின் போது கண்ணன் தனம் ஜீவா நடனம் ஆடிய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பல மொழிகளில் வெற்றி கண்ட சீரியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. சின்னத்திரையில் நம்பர் ஒன் சீரியல் வரிசையில் இருக்கிறது. இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கின்றனர். கூட்டு குடும்பத்தின் பாசம், அண்ணன் தம்பியின் ஒற்றுமை ஆகியவற்றை மையமாக வைத்தே கதை நகர்ந்து வருகிறது. சந்தோசமாக இருந்த குடும்பத்தில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. முல்லை மருத்துவ செலவிற்காக கடன் வாங்கிய நிலையில் அதனால் வீட்டில் பெரிய சண்டை வருகிறது.
Exams Daily Mobile App Download
அதனால் கதிர் வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார். பணத்தை கொடுத்துவிட்டு தான் நான் வீட்டிற்குள் வருவேன் என குறிக்கோளுடன் கதிர் கிளம்புகிறார். அதனால் மனம் உடைந்த மூர்த்திக்கு நெஞ்சுவலி வருகிறது. அதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து இருக்கின்றனர். அங்கே உடனே ஆப்ரேசன் செய்ய வேண்டும் என சொல்ல பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அப்போதும் மீனாவின் அப்பா வந்து பணம் கொடுக்கிறார்.
தனது கணவரை விவாகரத்து செய்த தொகுப்பாளினி பிரியங்கா – அதிர்ந்து போன ரசிகர்கள்!
மூர்த்தியை பார்க்க கதிர் வர தனம் வீட்டிற்கு வர சொல்கிறார். ஆனால் கதிர் முடியாது என சொல்ல அதனால் தனம் கோவப்பட்டு வெளியே போக சொல்கிறார். இப்படி சோகமாக கதை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மருத்துவமனையில் தனம், கண்ணன், ஜீவா படப்பிடிப்பின் இடையே நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர். மூர்த்திக்கு முடியாமல் இருக்கும் நேரத்தில் நடனம் கேட்கிறதா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது