தனது கணவரை விவாகரத்து செய்த தொகுப்பாளினி பிரியங்கா – அதிர்ந்து போன ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் பிரியங்கா தனது கணவரைப் பற்றி எதுவும் கூறாமலே இருந்து வருவதால் இருவரும் விவாகரத்து பெற்று விட்டார்கள் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.
விஜய் டிவி பிரியங்கா:
விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வரும் பிரியங்காவும், பிரபல டெக்னிசியனாக விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிவரும் பிரவீன் குமார் என்பவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான புதிதில் அவ்வப்போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பிரியங்கா வெளியிட்டு வந்தார். ஆனால், தற்போது சில வருடங்களாகவே தனது கணவர் பிரவீன்குமார் குறித்து எந்த நிகழ்ச்சியிலும் கூற பிரியங்கா மறுத்து வருகிறார்.
Exams Daily Mobile App Download
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொண்ட போது கூட பிரியங்கா அவரது கணவர் குறித்து எதுவுமே கூறவில்லை. தற்போதைக்கு இதைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் எனவும், கண்டிப்பாக ஒருநாள் இது பற்றி கூறுவேன் என கூறி அனைவரின் வாயையும் அடைத்தார். சமீபத்தில் ப்ரியங்காவின் தம்பியின் மனைவிக்கு குழந்தை பிறந்த விஷயத்தை சமூக வலைப்பக்கங்களில் தெரிவித்திருந்தார். இதனிடையே மீண்டும் ரசிகர்கள் பிரியங்காவிடம் உங்களது கணவரை பற்றி ஏன் கூற மாட்டேன் என்கிறீர்கள் என கேட்கத் தொடங்கிவிட்டனர்.
மீண்டும் விபத்தில் சிக்கிய சன் டிவி “கயல்” சீரியல் சைத்ரா – வைரலாகும் பதிவு! ரசிகர்கள் ஷாக்!
பிரியங்காவின் கணவர் பற்றி எவ்வளவு கேட்டாலும் கூட பிரியங்கா எதுவும் பதில் கூறாமலே இருப்பதால் இருவரும் விவாகரத்து பெற்று விட்டார்களோ என சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்திகளை பார்த்தும்கூட பிரியங்கா எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பதால் கண்டிப்பாக இருவரும் விவாகரத்து பெற்று இருப்பார்கள் அல்லது இருவருக்கும் ஏதேனும் கருத்து வேறுபாடு இருக்கலாம் என ரசிகர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கின்றனர். கூடிய விரைவில் வதந்திகளுக்கு பிரியங்கா முற்றுப்புள்ளி வைத்து தானே தீரவேண்டும் என ரசிகர்கள் அறிவிப்பிற்காக காத்து கொண்டிருக்கின்றனர்.