
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – நாளை (ஆகஸ்ட் 3) வேலை நிறுத்தம்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 14 வது ஊதிய ஒப்பந்தத்தின் 6ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற இருக்கும் நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் தொழிலாளர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை
தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை, சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் நாளை (ஆகஸ்ட் 3) ஆம் தேதி நடைபெற உள்ளது., இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர்.
Exams Daily Mobile App Download
ஆனால் சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளன. இந்நிலையில் போக்குவரத்து கழகத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அரசுப் போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் நாளைய தினம் பணியாளர்களுக்கு எந்த விடுப்பும் தரப்படாது என்றும் ஏற்கனவே அளித்த விடுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும் அன்றைய தினம் பணிக்கு வரவில்லை என்றால் சம்பளம் பிடிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் வீரியமெடுக்கும் கொரோனா தொற்று – ஒரே நாளில் 13,734 பேர் பாதிப்பு
மேலும் நாளை பணிக்கு வராத பணியாளர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரவை மீறி போராட்டம் செய்ய தூண்டினாலும் அவர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாளை (ஆகஸ்ட் 3) சென்னை குரோம்பேட்டையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதன்படி ஒரு தொழிற்சங்கத்திற்கு ஒருவர் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.