இந்தியாவில் நாளுக்கு நாள் வீரியமெடுக்கும் கொரோனா தொற்று – ஒரே நாளில் 13,734 பேர் பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 13,734 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று:
நாடு முழுவதும் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரைக்கும் இந்தியாவில் 4 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர் மற்றும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள், இறப்பு விகிதம் குறித்தான முழு விவரங்களையும் மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்தியாவை பொறுத்த வரைக்கும் கடந்த 24 மணி நேரத்தில் 13,734 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதனால், இது வரைக்கும் இந்தியாவில் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 4,40,50,009 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 24 மணி நேரத்தில் மட்டுமே கொரோனா தொற்றுக்கு ஆளாகி 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5,26,430 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 17,897 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர்.
8வது தேர்ச்சி பெற்றவர்களுக்கான மத்திய அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.1,51,100/
இதனால், இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் விகிதம் 98.49% ஆக உயர்ந்துள்ளது மற்றும் உயிரிழந்தவர்களின் விகிதம் 1.20% ஆக உள்ளது. மேலும், 0.32% பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்தியாவில் தினமும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டுமே 26,77,405 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். மேலும், மக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசியை உடனடியாக போட்டுக்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது.