தமிழக சுற்றுலா பயணிகளுக்கான எச்சரிக்கை – ‘இதை’ செய்வது கட்டாயம்!
மே மாதத்தில் இருந்தே உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா பரவலும் அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதகை சுற்றுலா:
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு தான் நீலகிரி மாவட்டம் உதகையில் மலர் கண்காட்சி நடைபெற்றது. எப்போதும் மலர் கண்காட்சி மே மாதத்தில் தான் நடைபெறுவது வழக்கம். அதிலும் கோடை விடுமுறை என்பதால் பல ஊர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் உதகையில் நடந்த மலர் கண்காட்சிக்கு வந்திருந்தனர். இது மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் கூட மலர்கண்காட்சியை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். கிட்டத்தட்ட 6 லட்சம் அளவுக்கு செடிகளை நடவு செய்திருந்தனர்.
Exams Daily Mobile App Download
மேலும், உதகையில் இந்தாண்டு நடைபெற்ற 124 ஆவது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் திறந்து வைத்தார். தற்போதும் தமிழகத்தில் அவ்வப்போது மழைப்பொழிவு இருந்து வருவதால் உதகையில் பூக்கள் அதிக அளவில் பூத்து குலுங்கி கொண்டிருக்கிறது. இதனால் இந்த மாதம் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன் தமிழகத்தில் கொரோனா பரவலும் அதிகரித்து வருவதால் உதகைக்கு சுற்றுலா வரும் பயணிகளை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் – ஜூலை 4 & 10ல் வெளியீடு!
அதாவது, உதகை தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இன்று முதல் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து தான் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், முகக்கவசம் அணியாமல் உதகை தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வந்தால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை என தோட்டக்கலைத்துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.