தமிழக தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான தேர்வு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பின் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. எனவே, இத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்கள் ஆன்லைன் வாயிலாக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தோ்வுத்துறை இயக்குநா் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பப் பதிவு:
தமிழகத்தில் 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பிற்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது . இதனால், தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தொடக்க கல்வி பட்டயபடிப்பினை வழங்கி வருகிறது. இந்நிலையில், 12ம் வகுப்பு முடித்தவர்கள் நேரடியாக ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேரலாம்.
Exams Daily Mobile App Download
இவர்களுக்கு இரண்டாண்டு தொடக்கக் கல்வி இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கற்பித்தல் முறைகள், உளவியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. மேலும் படிக்கும் காலத்தில் அரசு பள்ளிகளில் கற்பிக்கும் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்த தொடக்கக் கல்வி பட்டய படிப்பு (D.TED) கல்வி முடித்தவர்கள் பள்ளிகளில் 1 – 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார். இந்நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழக சுற்றுலா பயணிகளுக்கான எச்சரிக்கை – ‘இதை’ செய்வது கட்டாயம்!
அதன்படி, இந்த தொடக்கக்கல்வி பட்டயத்தோ்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தோ்வெழுத விரும்பும் தனித்தோ்வா்கள் www.dge.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தோ்வுத்துறை இயக்குநா் தெரிவித்துள்ளார். மேலும், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஜூலை 7-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதனை அடுத்து, ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.50 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் மதிப்பெண் சான்றிதழ் ரூ.100, சேவை மற்றும் இணையதள பதிவு கட்டணம் ரூ.65 ஆகியவற்றையும் உடன் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அளிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்காதவர்கள் கூடுதலாக ரூ.1,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.