வாக்காளர் அட்டை இல்லாமலேயே வாக்களிக்க முடியும் – முழு விவரம் இதோ!
நாட்டின் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்கும் முறை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை:
18 வது மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் நாடாளுமன்றத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ஆனது வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்கும் முறை குறித்த தகவலை தெரிவித்துள்ளது.
தனியார்மயமாக்கப்படும் 13 விமான நிலையங்கள் – பட்டியல் வெளியீடு!
அதன்படி இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருப்பதை வாக்காளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயரை இணைப்பதற்காக சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பதிவு அதிகாரியிடம் படிவம் 6 ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவுடன் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்கும் உரிமையை வாக்காளர்கள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.