தொடர்ந்து ஒரே விலையில் தங்கம் – அதிர்ச்சியில் பொதுமக்கள்!
சென்னையில் இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை:
நாளுக்கு நாள் உச்சம் தொடும் தங்கத்தின் விலை எப்போது குறையும் என மக்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏனென்றால் ஏப்ரல் மாதம் தொடக்கம் முதலில் தங்கம் விலை 51 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஏற்றம் சாமானிய மக்களுக்கு பெரும் கவலையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சுப காரியங்கள் வைத்திருப்பவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். தற்போது தங்கம் விலை 55 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
வாக்காளர் அட்டை இல்லாமலேயே வாக்களிக்க முடியும் – முழு விவரம் இதோ!
கடைசியாக கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ரூ.6,870க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ.640 உயர்ந்தும் 54,960 க்கு அதாவது நேற்றைய விலையில் இன்று தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலையும் எவ்வித மாற்றம் இன்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்று ரூ.7340க்கும் ஒரு சவரன் ரூ.58,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து,ரூ.90.00க்கு விற்பனை செய்யப்படுகிறது .ஒரு கிலோ வெள்ளியின் விலை 90 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.