இன்று மாலை 6 மணி முதல் அமலாகும் 144 தடை உத்தரவு – தீவிர கட்டுப்பாடுகள்!
ஏப்ரல் 19ஆம் தேதி புதுச்சேரியில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாக உள்ளது.
தடை உத்தரவு:
நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக தேர்தல் பிரச்சாரங்கள் முடிக்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். இதனை முன்னிட்டு ஏப்ரல் 17ஆம் தேதியான இன்று மாலை 6:00 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. மேலும் மாலை 6:00 மணி முதல் 20 ஆம் தேதி காலை 6 மணி வரை புதுச்சேரி முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஒரே விலையில் தங்கம் – அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இதனால் புதுச்சேரி தொகுதியை சேர்ந்த வாக்காளராக இல்லாதவர்கள் இன்று மாலை 6 மணிக்குள் அந்தந்த தொகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்தல் நாளன்று ஓட்டுச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மொபைல் போன் அல்லது மைக்ரோ போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் தங்கள் தொழில், வேலை செய்வதற்கும், வாக்களிக்க செல்வதற்கும், தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஒன்று கொடுவதற்கும் தடை கிடையாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.