ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில் கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் மோதியது. அதில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
வெற்றி அணி
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் 31வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் மோதியது. அதில் முதலில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களை எடுத்தது. அதில் அதிகபட்சமாக சுனில் நரேன் 109 ரன்களை எடுத்தார்.
அதன் பின் ராஜஸ்தான் அணி 224 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கினார்கள். ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் சற்று சொதப்பினாலும், பின் பட்லர் -ரியான் பராக் ஜோடி அதிரடியாக விளையாடி 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்தனர். பின் பட்லர் கொல்கத்தா பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு 107 ரன்களை எடுத்தார். அந்த அணி 224 ரன்களை எடுத்து வெற்றியை தட்டி தூக்கியது. மேலும் இதுவரை சேசிங் செய்த அணி என்ற சாதனையை ராஜஸ்தான் படைத்துள்ளது.