தனியார்மயமாக்கப்படும் 13 விமான நிலையங்கள் – பட்டியல் வெளியீடு!
திருச்சி உட்பட 13 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படுகிறது. தேர்தலுக்கு பின் 13 விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு.
தனியார்மயம்:
தேசிய பணமாக்குதல் திட்டத்தின் கீழ் வருவாய் தரக்கூடிய அரசு சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு அதன் மூலம் 6 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், நிலக்கரி சுரங்கங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆகியவற்றை தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு – காரணம் இது தான்!
அதன்படி திருச்சி உட்பட 13 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படுகிறது. இது குறித்து கூறுகையில், இந்திய விமான நிலைய ஆணையம் தனியார்மயமாக்கல் 3.0திட்டத்திற்கு தயாராக உள்ளது என்றும் தேர்தல் முடிந்ததும் AAI மேலும் 13 விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க தயாராகி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புவனேஸ்வர், திருச்சி, இந்தூர், ராய்பூர், அமிர்தசரஸ், வாரணாசி, குஷிநகர், கயா, ஹுப்பாலி, அவுரங்காபாத், ஜபல்பூர், திருப்பதி மற்றும் கங்காரா விமான நிலையங்கள் அடங்கும்.