தமிழகத்தில் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு – காரணம் இது தான்!

0

தமிழகத்தில் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு – காரணம் இது தான்!

தமிழகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 20000 பேருக்கு பணி வழங்கப்படும் என வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதால், அதனை கண்டித்து லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

தேர்தல் புறக்கணிப்பு

தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் வெளியிட்ட வாக்குறுதியில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 20000 பேருக்கு பணி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் அது நிறைவேற்றாமல் இருப்பதால் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முற்றுகையிட்டனர்.

அரசு வேலைக்கு 54.25 லட்சம் பேர் பதிவு – முழு விவரங்களுடன்!

அதன் பின் சென்னை தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில் 50 சதவீதம் பேர் சீனியாரிட்டி அடிப்படையிலும், 50 சதவீதம் பேர் தகுதி தேர்வு எழுதியவர்களும் பணி அமர்த்தப்படுவர் என அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பொன்முடி மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஆகியோர் உறுதி அளித்தனர். ஆனால் அதன் பின் கூட அவை நிறைவேற்றாமல் இருக்கிறது. எனவே ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தினர், இதனை கண்டித்து லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!