தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

தமிழகத்தில் மதுரை மாவட்டம் அத்திப்பட்டியில்  டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடப்பட இருப்பதாக ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகத்தில் பொதுவாக முக்கிய திருவிழாக்கள், பண்டிகை நாட்கள், பொது விடுமுறைகள், பெரிய தலைவர்களின் பிறந்தநாள் போன்றவற்றில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அந்த வகையில் மதுரை மாவட்டம் சாப்டூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டி கிராமத்தில் புது மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் திருவிழாவை முன்னிட்டு மக்கள் வசதிக்காக டாஸ்மாக் கடைகள் மூடப்பட இருக்கிறது.

நெருங்கியாச்சு குரூப் 4 தேர்வு – பாஸ் பண்ணனுமா “இத” கண்டிப்பா பண்ணுங்க!

இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்ட அறிவிப்பில், மதுரை மாவட்டம் அத்திப்பட்டி கிராமத்தில் புதுமாரியம்மன் கோவில் திருவிழா ஏப்ரல் 28,29,30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. அதனால் திருவிழா நடைபெறும் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!