வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு – மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள்!

0
வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு - மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள்!
வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு - மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள்!
வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு – மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள்!

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவின் படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை மக்கள் தானாக முன் வந்து இணைக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாக்காளர் அடையாள அட்டை:

மக்களுக்கு தேவையான முக்கியமான அடையாள அட்டையான ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலை தூய்மையாக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பலருக்கு வெவ்வேறு தொகுதிகளிலும், வெவ்வேறு மாநிலங்களிலும் ஓட்டுக்கள் இருப்பதாக புகார் வந்ததை அடுத்து இரட்டை வாக்கு முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

Exams Daily Mobile App Download

ஆதார் அட்டையை இணைப்பதன் மூலமாக வாக்காளர்களின் தனி தகவல்களை உறுதிப்படுத்தும் பணியை தேர்தல் ஆணையம் செய்ய இருக்கிறது. இந்த பணிகள் கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு 31.3.2023 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விருப்பத்தின் அடிப்படையில் படிவம் 6 பி மூலமாக ஆதார் எண்களின் விவரங்களை தெரிவித்து இணைத்து கொள்ளலாம்.

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் – ஆணையரின் புதிய வழிகாட்டுதல்கள்

அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண் விவரங்களை படிவம் 6 பி மூலமாக பெற்று சம்மந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் மூவமாக வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கும் பணியை செய்வார்கள். அல்லது இ சேவை மையம் மற்றும் மக்கள் சேவை மையம் ஆகியவை மூலமாக வாக்காளர்கள் நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள எண்ணுடன் இணைக்கலாம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் வாக்காளர் பதிவு அலுவலரால் பாதுகாக்கப்படும். இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பின் படி, அனைத்து வாக்காளர்களும் தானாக முன்வந்து ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இனைத்து மாவட்டத்தின் 4 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!