தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் – ஆணையரின் புதிய வழிகாட்டுதல்கள்!
சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார். இது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
புதிய வழிகாட்டுதல்கள்:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. மேலும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு சில வாரங்களுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அப்படி பணியில் அமர்த்தப்படும் தற்காலிக ஆசிரியர்களில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500 ஊதியமாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000 ஊதியமாகவும், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12,000 ஊதியம் என்ற அடிப்படையில் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
பின்னர் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக திருத்திய வழிகாட்டு முறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதில், திறன் உள்ள ஆசிரியர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும், வகுப்புகளில் பாடம் நடத்தி திறனை அறிந்து நியமனம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் டெட் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.5% அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்நிலையில் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் குறித்து பின்வரும் அறிகுறிகளை பின்பற்றியும், கால அட்டவணை படியும் பணிகளை மேற்கொள்ளுமாறு தொடர்புடைய முதன்மை அலுவலகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- 01.06.2022 தேதி வரையில் அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஏற்பட்ட காலிபணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.
- விண்ணப்பதாரரிடம் இருந்து எழுந்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வி சான்றுதல்களுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலகரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
- தற்காலிக நியமனம் சார்ந்து சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின்படி, இடைக்கால ஆசிரியர் பதவிக்கு அரசாணை எண்.12 பள்ளிக்கல்வித்துறை நாள். 30.01.2020- ன் படி வரையறுக்கப்பட்டு உள்ள கல்வி தகுதியுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்களை மட்டுமே தற்காலிக நியமனம் செய்யத்தக்க வகையில் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு காலிப் பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தால், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.