இரவும், பகலும் தூங்காமல் கஷ்டப்படும் ஆல்யா மனசா – காரணம் என்ன தெரியுமா? ரசிகர்கள் வியப்பு!
தற்போது தான் ஆலியாவிற்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கவனித்து கொள்வதற்காக ஆலியா இரவு முழுக்க தூங்காமல் அர்ஸுடன் நேரத்தை செலவிடும் படியான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஆலியா & சஞ்சீவ்:
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமானவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். ராஜா ராணி தொடரில் நடித்து கொண்டிருந்த போதே ஆலியாவும் சஞ்சீவும் காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா கர்ப்பமானார். இவர்களுக்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. ஐலா பாப்பா பிறந்த பிறகு ஆலியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடிக்க ஒப்பந்தமானார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – முல்லைக்கு காத்திருக்கும் நல்ல செய்தி!
ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் நிலையில் ஆலியா மானசா சீரியலை விட்டு விலகுவார் என எதிர்ப்பார்த்த சமயத்தில் 9 மாதம் வரையிலும் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போதும் கூட தொடர்ந்து ராஜா ராணி தொடரில் நடித்து வந்தார். பின்பு பிரசவத்திற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே சீரியலில் இருந்து விலகினார். ஐலா பாப்பாவின் பிறந்தநாளான மார்ச் 20 அன்று தான் ஆலியாவிற்கு வளைகாப்பை நடத்தினர்.
Exams Daily Mobile App Download
தற்போது ஆலியாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் இருக்கும் ஒவ்வொரு அழகிய தருணங்களை அவ்வப்போது சமூக வலை பக்கங்களில் பதிவிட்டபடி இருக்கிறார். தற்போது அர்ஷ் இரவு முழுக்க தூங்காமல் விழித்து கொண்டே இருப்பதால் ஆலியாவால் இரவில் கூட தூங்க முடியவில்லை. இரவில் தூங்காமல் இருக்கும்படியான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.