பாக்கியா கணவரிடம் பேசப்போகும் ராதிகா, மாட்டிக் கொள்ளும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பெரிய பிரச்சனைக்கு பின் பாக்கியா தன்னுடைய தொழிலை மூட முடிவு செய்கிறார். இந்நிலையில் பாக்கியாவும் ராதிகாவும் ஒன்று சேர அதனால் கோபிக்கு பெரிய சிக்கல் வர இருக்கிறது. பாக்கியாவின் கணவரிடம் பேசி ராதிகா பிசினஸ் செய்ய வைக்க வேண்டும் என பிடிவாதம் செய்ய கோபி வேறு வழியில்லாமல் பாக்கியாவை மீண்டும் தொழில் தொடங்க சொல்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா பெரிய பிரச்சனைக்கு பின் வெளியே வந்து இருக்கிறார். அதனால் அவருடைய தொழில் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கோபி இனிமேல் தொழில் செய்தால் நான் உன்னிடம் பேசமாட்டேன் சாப்பிட மாட்டேன் என சொல்கிறார். அதனால் பாக்கியா அலுவலகத்தை மூட முடிவு செய்கிறார். இது ஒருபக்கம் இருக்க பாக்கியா மீது தவறு இல்லை என நிருபணம் ஆனதை அடுத்து ராதிகா வருத்தப்பட்டு பாக்கியாவிடம் பேசுகிறார். பாக்கியாவை சந்திக்க வேண்டும் என சொல்ல இருவரும் கோவிலில் பார்க்கின்றனர்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி செய்த சாதனை – ரசிகர்கள் வாழ்த்து மழை!
ராதிகா வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்க அப்போது பாக்கியா தொழில் எல்லாம் முடிந்துவிட்டது. இனிமேல் தொழில் செய்ய வேண்டாம் என இனியா அப்பா சொன்னதாக சொல்கிறார். அதை நினைத்து ராதிகா மிகவும் வருத்தப்படுகிறார். நான் வேண்டும் என்றால் உங்க கணவரிடம் பேசவா என ராதிகா கேட்க பாக்கியா அதெல்லாம் வேண்டாம் அவர் உறுதியாக சொல்லிவிட்டதாக சொல்கிறார். ராதிகா இதை நினைத்து வருத்தப்பட எழில் தாத்தா என யார் சொல்லியும் பாக்கியா மனம் மாறவில்லை.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் ராதிகா கோபியிடம் டீச்சர் வீட்டில் தொழில் செய்ய வேண்டாம் என சொன்னதாக சொல்கிறார். அதனால் நாம இருவரும் அவருடைய கணவரிடம் பேசுவோம் என சொல்ல கோபிக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் டீச்சர் கணவரிடம் நான் பேசுகிறேன் என சொல்லி கோபி நடிப்பு திறமையை காட்ட ராதிகாவிற்காக வேறு வழி இல்லாமல் கோபி பாக்கியாவை தொழில் செய்ய சொல்லப் போகிறார். அதனால் மீண்டும் பாக்கியா தன்னுடைய தொழிலை நல்லபடியாக கொண்டு வர பல முயற்சிகளை செய்ய போகிறார்.