விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி செய்த சாதனை – ரசிகர்கள் வாழ்த்து மழை!
பாக்கியலட்சுமி சீரியல் மக்களிடையே இந்த அளவுக்கு ரீச்சாகி இருப்பதற்கு முக்கியமான காரணமான கோபி தற்போது சிறந்த வில்லன் என்கிற விருதை வாங்கியுள்ளார். இன்னும் பாக்கியலட்சுமி சீரியலை சுவாரசியமாக கொண்டு செல்ல சீரியல் குழுவினர்கள் பிளான் செய்து கொண்டிருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் உள்ள ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் எப்போது பாக்கியாவிற்கு தெரியவரப்போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தன்னை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டிருக்கும் பாக்கியாவை விட்டு விட்டு ராதிகாவை திருமணம் செய்யக் கூடிய அனைத்து ஏற்பாடுகளையும் கோபி செய்து கொண்டிருக்கிறார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – முல்லைக்கு காத்திருக்கும் நல்ல செய்தி!
பாக்கியாவும் ராதிகாவும் சிறந்த நண்பர்களாக இருப்பதால் எப்படியும் உண்மைகள் கூடிய சீக்கிரத்தில் வெளியே வந்து விடுமோ என பயந்து இருவரையும் பிரிக்க கோபி திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். கோபியின் நடிப்புக்காக மட்டுமே பலரும் பாக்கியலட்சுமி தொடரினை விரும்பிப் பார்த்து வருகின்றனர். அதாவது கோபியின் கதாபாத்திரத்தில் இவருக்கு பதிலாக வேறு எந்த நடிகராவது நடித்திருந்தால் கூட பாக்கியலட்சுமி சீரியல் இந்த அளவுக்கு ரீச் ஆகியிருக்குமா என்பது சந்தேகமே. அந்தளவுக்கு கோபியின் ஒவ்வொரு முகபாவனைகளும் தத்ரூபமாக இருக்கும்.
Exams Daily Mobile App Download
கோபி நடிப்பால் மட்டுமே பாக்கியலட்சுமி தொடர் டிஆர்பி மதிப்பீட்டிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. கடந்த வாரம் விஜய் தொலைக்காட்சியில் விஜய் அவார்ட்ஸ் நடைபெற்றது. அதில் சிறந்த வில்லன் என்கிற விருதுக்கு கோபி தேர்வாகி இருந்தார். அதுமட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் சிறந்த வில்லன் என்ற விருதை கோபி தான் பெற்றார். சிறந்த வில்லன் விருதை கோபி பெற்றது மட்டுமல்லாமல் சிறந்த சீரியல் என்கிற விருதையும் பாக்கியலட்சுமி தொடர் தான் வாங்கியுள்ளது. நாளுக்கு நாள் பாக்கியலட்சுமி சீரியல் மக்களிடையே நல்ல ரீச்சாகி வருவதால் சீரியலை சுவாரசியமாக கொண்டு செல்ல சீரியல் குழுவினர்கள் பிளான் செய்து கொண்டிருக்கின்றனர்