“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – முல்லைக்கு காத்திருக்கும் நல்ல செய்தி!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை டிரீட்மென்ட் எடுத்து இருப்பதால் குடும்பத்தில் அனைவரும் முல்லையை அக்கறையுடன் கவனித்து வருகின்றனர். இந்நிலையில் நாளைய எபிசோடில் மூர்த்தி கடன் வாங்கியவர் பணம் கேட்டு வர ஜீவாவின் மாமா ஜனார்தனன் பணத்தை கொடுத்து உதவி செய்ய போகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சந்தோசத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பணம் செலவு செய்தாலும் முல்லையின் சந்தோசம் தான் முக்கியம் என்பதால் குடும்பத்தில் கடன் வாங்கி முல்லைக்கு டிரீட்மென்ட் பார்க்கின்றனர். முல்லை பணம் செலவானதை நினைத்து வருத்தப்பட்டாலும் மருத்துவமனைக்கு சென்று சீக்கரம் குழந்தை பிறக்க நினைப்பதை நினைத்து சந்தோசமாக இருக்கிறார். மீனாவிற்கு பணம் அதிகம் செலவு செய்ததை நினைத்து வருத்தமாக இருக்கிறது.
குடும்பத்துடன் பயங்கர பிசியாக இருக்கும் விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ புகழ் – வைரலாகும் புகைப்படம்!
ஆனாலும் மீனா முல்லைக்கு குழந்தை வேண்டும் என அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் மீனாவின் அப்பா முல்லையை பார்க்க வருகிறார். அப்போது முல்லையிடம் நல்லபடியாகா பேசிவிட்டு மீனாவிடம் பணம் எப்படி வந்தது என கேட்கிறார். உடனே மீனா அதெல்லாம் தெரியவில்லை என சொல்ல உனக்கு மட்டும் இவ்வளவு செலவு செய்யமாட்டார்கள். ஆனால் அந்த பெண்ணிற்கு எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள் பாரு என சொல்ல அதை எல்லாம் கதிர் கேட்டு விடுகிறார்.
Exams Daily Mobile App Download
அவர் கண்டுகொள்ளாமல் முல்லையை மட்டுமே கவனித்து வருகிறார். மறுபக்கம் மூர்த்தி கடன் வாங்கியவர் வந்து பணத்தை கேட்க மூர்த்தியிடம் பணம் இல்லை உடனே ஜீவா ஜனார்த்தனன் பணத்தை எடுத்து கொடுத்து உதவி செய்கிறார். இந்த விஷயம் மீனாவிற்கு தெரிந்து சண்டை போடுகிறாரா இல்லை மீனாவும் முல்லையை நினைத்து சந்தோசப்பட போகிறாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. மேலும் இந்த வாரம் முல்லைக்கு நல்ல செய்தி வரும் என்பதில் சந்தேகமில்லை.