சஞ்சீவ் குறித்து ஆல்யா மானசா சொன்ன சூப்பர் தகவல் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
ஆலியாவிற்கு தற்போது தான் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது ஆலியா மற்றும் சஞ்சீவிடம் விளையாட்டுத்தனமாக கேள்வி கேட்கும்படியாக இன்டெர்வியூ நடத்தப்பட்டது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆலியா மற்றும் சஞ்சீவ்:
தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக பிரபலமானவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். இந்த சீரியலின் மூலமாகவே இருவரும் காதலித்து திருமணமும் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. தற்போது இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட இன்டர்வியூவில் ஒரு வெங்காயம் மற்றும் பூண்டை கையில் கொடுத்து இதில் ஆலியா தான் வெங்காயம், சஞ்சீவ் தான் பூண்டு என கூறுகிறார்கள்.
முதன் முறையாக திருமணத்தை பற்றி வாயை திறந்த ‘பாக்கியலட்சுமி’ ரித்திகா – எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்!
எந்த கேள்விக்கு யார் பெயரை கூற வேண்டுமோ அதற்கு பதிலாக வெங்காயம், பூண்டை தூக்கி காட்ட வேண்டும் மற்றும் சஞ்சீவ் என பதில் கூறும் போது பூண்டை தூக்கி காட்ட வேண்டும். அதில் யார் அதிகமாக possessive என்று கேட்கப்படுகிறது. அதற்கு ஆலியா நான் தான் மிகவும் பொஸசிவ் என்று கூறுகிறார். பிறகு யார் நன்றாக சமைப்பார்கள் என கேட்கப்படுகிறது. அதற்கு ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஒரே மாதிரி சஞ்சீவ் நன்றாக சமைப்பார் என கூறுகிறார்கள்.
பிறகு யார் மிகவும் ரொமான்டிக்காக இருப்பார்கள் என கேட்கிறார்கள். அதற்கும் ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஒரேமாதிரியாக சஞ்சீவ் தான் எப்பொழுதும் ரொமான்டிக்காக இருப்பார் என கூறுகிறார்கள். சஞ்சீவ் தான் எப்போதும் எவ்வளவு வேலை இருந்தாலும் எனக்காக நேரம் ஒதுக்கி பேசுவார். என்னிடம் பேச மாட்டாயா என கெஞ்சி கொண்டிருப்பார் என ஆலியா சிரித்தபடி கூறுகிறார். அதற்குப் பிறகு யார் மிகவும் புத்திசாலி என கேட்க அதற்கும் இருவரும் சஞ்சீவ் தான் மிகவும் புத்திசாலி என கூறும்படியான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.