முதன் முறையாக திருமணத்தை பற்றி வாயை திறந்த ‘பாக்கியலட்சுமி’ ரித்திகா – எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்!
பாக்கியலட்சுமி தொடரின் மூலமாக பிரபலமான ரித்திகா தற்போது அவருக்கு எப்போது திருமணம் என்பது குறித்தான தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் பலரும் அவரது திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ரித்திகாவின் திருமணம்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி தொடரின் மூலமாக மக்களின் மத்தியில் பிரபலமானவர் தான் ரித்திகா. இந்த சீரியலில் ரித்திகாவின் கதாபாத்திரம் அவ்வளவு முக்கியமானதாக இல்லாவிட்டாலும் இந்த சீரியல் மூலமாகவே எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாதித்தார்.
பாஸ்கர் வீட்டில் பார்வதி பற்றி குறை சொல்லும் அர்ச்சனா – “ராஜா ராணி 2” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
நம்மவர் கமல், ஸ்டார் மியூசிக் சீசன் 2, காமெடி ராஜா கலக்கல் ராணி மற்றும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பாக்கியலட்சுமி தொடரில் எழிலுக்கு ஜோடியாக நடித்துவரும் ரித்திகா ஒரு விதவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதாவது ரித்திகா விதவை என்பது தெரியாமலேயே ரித்திகாவின் மீது எழிலுக்கு காதல் வருகிறது. விதவை என்று தெரிந்த பின்பும் கூட தனது மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென எழில் நினைத்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே இவருக்கு 2 மில்லியன் அளவுக்கு ரசிகர் கூட்டங்கள் இருக்கிறார்கள். சீரியல்களில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைப் பக்கங்களில் அதிகமாக நேரத்தை செலவிட்டு வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி கேட்டு அதற்கான பதிலை வெளியிடும் வண்ணம் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். ரசிகர்கள் பலரும் தங்களுக்கான கேள்விகளை அவரிடம் கேட்டனர். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்திருந்தார்.
தற்போது அதில் உங்களுக்கு விருப்பமான பாடல் ஒன்றை பாடுங்கள் என ஒரு ரசிகர் கேட்கிறார். அதற்கு மெல்லினமே மெல்லினமே என்னும் பாடலை பாடுகிறார். பிறகு உங்களுக்கு சூட்டிங் எவ்வளவு நேரம் நடக்கும் என கேட்கிறார்கள். அதற்கு குறைந்தது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கும், சில நேரங்களில் மறு நாள் வரைக்கும் கூட சூட்டிங் இருக்க வாய்ப்பிருக்கிறது எனக் கூறியுள்ளார். அதற்குப் பிறகு உங்களுக்கு எப்பொழுது திருமணம் என ஒரு ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு திருமணமா அதை நான் முடிவு செய்ய வேண்டியதில்லை அந்த விதி தான் முடிவு செய்ய வேண்டும் என நக்கலாக கூறியுள்ளார்.