“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் நடக்க இருக்கும் சம்பவம் – வெளியான அப்டேட்! வைரலாகும் புகைப்படங்கள்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தற்போது மூர்த்தியின் மொத்த குடும்பத்திற்கே பல கஷ்டங்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் மீனாவின் தங்கை ஸ்வேதா மற்றும் மல்லி மகன் பிரசாந்தின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், குடும்பத்திற்கே கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வந்த வண்ணம் இருக்கிறது. அதாவது ஜனார்த்தனன் செய்த சதியால் குடும்பமே வீட்டை விட்டு வெளியேறி சிறிய வீட்டில் இருந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதை எல்லாம் தாங்கிக் கொண்டாலும், அடுத்ததாக கடையையும் மூட வைத்துள்ளார் ஜனார்த்தனன். இதை நினைத்து குடும்பத்தில் அனைவரும் வருத்தப்பட்டாலும், மீண்டும் பழைய கடையை திறந்து தங்களுடைய வியாபாரத்தை தொடங்கி இருக்கின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் கடையை மூட ஜனார்த்தனன் தான் காரணம் என்ற உண்மை மூர்த்திக்கு தெரிய வருகிறது. அதை அவர் எப்படி சமாளித்து கடையை மீண்டும் திறப்பார் என்பதே ட்விஸ்ட்டாக வைக்கப்பட்டுள்ளது. அதே போல இனி வரும் வாரங்களில் மீனாவின் தங்கைக்கும், மல்லியின் மகன் பிரசாந்த்திற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் கலந்து கொள்ள இருக்கின்றனர். அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
மீண்டும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் – கதையில் வர போகும் மாற்றம்!
Exams Daily Mobile App Download
ஏற்கனவே ஜனார்த்தனன் மூர்த்தி குடும்பத்தை அழிக்க நினைப்பதால் நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை அவமானப்படுத்த ஏதாவது பேசுவார். என்ன பிரச்சனைகள் எல்லாம் விஷேஷ வீட்டில் வெடிக்கப்போகிறது என பொறுத்து இருந்து பார்க்கலாம்.