மீண்டும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் – கதையில் வர போகும் மாற்றம்!

0
மீண்டும்
மீண்டும் "பாரதி கண்ணம்மா" சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் - கதையில் வர போகும் மாற்றம்!
மீண்டும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் – கதையில் வர போகும் மாற்றம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், தற்போது கதைக்களம் வேறு கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல புது முகங்கள் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா:

விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல், விரைவில் முடிய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் உடனே அப்படி முடித்துவிடாமல் சீரியலில் பல ட்விஸ்ட்கள் வைக்கப்பட்டு தொடரின் கதையே மாற்றப்பட்டுள்ளது. கண்ணம்மா பாரதி செய்த தவறுகளை ஏற்றுக் கொள்ளாமல் குழந்தைகளுடன் கிராமத்திற்கு செல்கிறார். அவரை தேடி பாரதி பல இடங்களில் அலைந்து கொண்டிருக்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

இதற்கிடையே பல புது முகங்கள் இந்த சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கின்றனர். ஏற்கனவே வெளியான தகவலின் படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாமரை செல்வி, சீரியல் நடிகர் ராஜ் குமார் ஆகியோர் என்ட்ரி கொடுத்து இருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகர் மோகன் அவர்கள் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அவர் ஏற்கனவே ஈரமான ரோஜாவே சீரியல் மூலமாக பிரபலமானவர்.

திடீரென தொடரை விட்டு விலகிய “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை – இனி இவருக்கு பதில் இவர்! ரசிகர்கள் ஷாக்!

Exams Daily Mobile App Download

அது மட்டுமில்லாமல் அவர் 2 ஆண்டுகளுக்கு முன்னதாக கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறிய போது உதவி செய்தவர் என்பதால், தற்போது அவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியே வரும் கண்ணம்மாவிற்கு உதவி செய்ய இருப்பது போல கதை கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அவர் பிக்பாஸ் தாமரை செல்வியின் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!