தமிழகத்தில் டிச.16 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் டிச.16 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் டிச.16 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் டிச.16 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் நலனிற்காக அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில் ராணிப்பேட்டையில் வருகிற 16 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழக இளைஞர்கள் பலர் படித்துவிட்டு வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதந்தோறும் 3வது வெள்ளிக்கிழமை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த மாதம் ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

தமிழக பெண்களுக்கு புத்தாண்டு பரிசு.. ரூ.1000 உரிமைத்தொகை – வெளியான முக்கிய அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இந்த முகாம் ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள கல்வித் தகுதியாக 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பி.இ. போன்ற படிப்புகள் அறிவிக்கப்ட்டுள்ளது. மேலும் இந்த முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!