தனம் கர்ப்பமாக இருப்பதை சொல்ல முடியாமல் தவிக்கும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் கர்ப்பமாக இருப்பதை மூர்த்தி குடும்பத்திடம் சொல்ல சொல்கிறார். மூர்த்தி தம்பிகளிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில். தனம் வெளியே சென்றுவிட்டு வர உடனே மீனா, அக்கா நடவடிக்கை சரி இல்லை என சொல்கிறார். அப்போது தனம் அவர்களிடம் எப்படி சொல்வது என தெரியாமல் இருக்கிறார். பின் மூர்த்தி வீட்டிற்கு வர தனம் எல்லாரிடமும் விஷயத்தை சொல்ல வேண்டும் என சொல்கிறார்.பின் தனம் நான் எல்லாரையும் நான் கூப்பிடுகிறேன் என சொல்ல, மூர்த்தி நான் கூப்பிடுகிறேன் என கூப்பிட கண்ணன் மட்டும் வருகிறார். பின் தம்பிகளை வர சொல்ல, தனம் மற்றவர்களை கூப்பிட செல்கிறார் ,
ரூமில் ஐஸ்வர்யா மீனா முல்லை இருக்க தனம் உங்களை மாமா அழைப்பதாக கூப்பிடுகிறார். அப்போது அவர்கள் எதற்கு என கேட்க, தெரியவில்லை என தனம் சொல்கிறார். பின் அவர்கள் கிளம்பி செல்ல தனம் மட்டும் ரூமில் இருக்கிறார். மறுபக்கம் மூர்த்தி எல்லாரிடமும் எப்படி சொல்வது என தெரியாமல் பெருமாள் சித்தப்பா தாமதமாக குழந்தை பெற்றுக் கொண்டதை பற்றி சொல்கிறார். அனைவரும் மூர்த்தி ஏன் இப்படி பேசுகிறார் என தெரியாமல் இருக்கிறார்கள்
கடைசி வரை மூர்த்தி விஷயத்தை சொல்லவில்லை. பின் தனம் ஏன் சொல்லவில்லை என கோவமாக இருக்க அப்போது மூர்த்தி இன்று ஒரு நாள் போகட்டும் என சொல்கிறார். வீட்டில் ஏற்கனவே இருவர் கர்ப்பமாக இருக்காங்க இந்த நேரத்தில் நான் கர்ப்பமாக இருப்பதை எப்படி சொல்வது என பயமாக இருப்பதாக சொல்கிறார். மூர்த்தி அதெல்லாம் நினைக்கமாட்டாங்க என சொல்ல, அப்போ நீங்களே போய் சொல்லுங்கள் என சொல்கிறார். ஆனால் மூர்த்தி நான் எப்படி சொல்வது என கேட்கிறார். அப்போது தனம் கரண்டியை எடுத்து அடிக்க வர உடனே ஜீவா வந்து பார்த்து ஏன் சண்டை போடுறீங்க என கேட்கிறார். பின் மூர்த்தி அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்லி சமாளிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது