எதிர்நீச்சல் சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா.. ஆதிரையின் திருமணம் இவர் கூடத்தான் – வெளியான அப்டேட்!

0
எதிர்நீச்சல் சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா.. ஆதிரையின் திருமணம் இவர் கூடத்தான் - வெளியான அப்டேட்!
எதிர்நீச்சல் சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா.. ஆதிரையின் திருமணம் இவர் கூடத்தான் - வெளியான அப்டேட்!
எதிர்நீச்சல் சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா.. ஆதிரையின் திருமணம் இவர் கூடத்தான் – வெளியான அப்டேட்!

சன் டிவியில் அன்றாடம் இரவு 9.30 மணிக்கு டெலிகாஸ்ட் செய்யப்படும் தொடர் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்க உள்ளது என்பது பற்றிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

எதிர்நீச்சல்:

பெண் உரிமையை பற்றி சரியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் தொடர் எதிர்நீச்சல். ஆரம்பத்தில் இருந்து இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கதையை தாண்டி இதில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களின் நடிப்பும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. தற்போது ஆதிரை SKR-ன் தம்பி அருணை திருமணம் செய்ய விரும்புகிறார்.

தனம் கர்ப்பமாக இருப்பதை சொல்ல முடியாமல் தவிக்கும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

ஆனால் குணசேகரன் கரிகாலனை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துவிட்டார். ரசிகர்கள் பலரும் ஆதிரைக்கு கரிகாலனுடன் திருமணம் நடக்குமா அல்லது அருணுடன் திருமணம் நடக்குமா என காத்துகொண்டு உள்ளனர். இந்நிலையில் இந்த சீரியலில் சக்தியாக நடிக்கும் சபரி பிரசாத் தற்போது பேட்டி ஒன்றில் இந்த சீரியல் பற்றி கூறியிருக்கிறார். அதில் யாருடன் ஆதிரைக்கு திருமணம் நடக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் “ஒவ்வொரு தினமும் காலையில் தான் எங்களுக்கு அந்த எபிசோடு பற்றி சொல்லப்படும். அதனால் அடுத்து என்ன நடக்க போகிறது என நாங்களும் யோசித்துக் கொண்டே இருப்போம். மேலும் பலர் ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் திருமணம் நடக்குமா என கேக்கிறார்கள். என்னை பொறுத்த வரையில் திருமணம் நடக்காமல் இருக்கிறதே நல்லது தான்” என்று சொல்லியுள்ளார். சபரியின் இந்த பதிலை வைத்து பார்த்தால் ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் நடப்பது சந்தேகம் தான் போல குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!