கோபிக்காக எழிலிடம் கோவப்படும் பாக்கியா, பாக்கியாவை பார்க்க நேரில் வரும் ராதிகா – நடக்கப்போகும் சம்பவம்!

0
கோபிக்காக எழிலிடம் கோவப்படும் பாக்கியா, பாக்கியாவை பார்க்க நேரில் வரும் ராதிகா - நடக்கப்போகும் சம்பவம்!
கோபிக்காக எழிலிடம் கோவப்படும் பாக்கியா, பாக்கியாவை பார்க்க நேரில் வரும் ராதிகா - நடக்கப்போகும் சம்பவம்!
கோபிக்காக எழிலிடம் கோவப்படும் பாக்கியா, பாக்கியாவை பார்க்க நேரில் வரும் ராதிகா – நடக்கப்போகும் சம்பவம்!

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் தன் படத்தின் பிரிவ்யூ ஷோவிற்கு குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்து செல்வது போல் காட்சிகள் வந்தது. இதற்கு கோபி வராததால் ஈஸ்வரி கோவமாக இருந்தார். அதன் பிறகான சம்பவங்கள் இன்றைய எபிசோடில் காட்டப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி:

எழில் படத்திற்கு கோபி வராதது குறித்து ஈஸ்வரி கோபியிடம் கேட்க, நான் ஆசையாக வரலாம் என்று தான் இருந்தேன் எழில் தான் என்னை வரக்கூடாது என்று சொல்லி விட்டான் என்று கோபி கூறியதை கேட்டதும் பாக்கியாவிற்கு எழில் மீது அதிக கோவம் வந்து விட்டது. கோபியிடமும் இதை சொல்லி பாக்கியா வருத்தப்படுகிறார். வீட்டில் ஜெனி, செல்வி, இனியா மூவரும் அமர்ந்து பாக்கியாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது எழில் படத்தை பற்றி அனைவரும் புகழ்ந்து பேசுவதாக செல்வி சொல்கிறார். எழில் அங்கு வந்து எப்போதும் போல பாக்கியாவிடம் பேசுகிறார்.

‘தளபதி’ விஜய் கோபத்தில் ரசிகர்களுக்கு விடுத்த எச்சரிக்கை – வைரலாகும் புகைப்படம்!

ஆனால் பாக்கியா எழிலிடம் பேசாமல் இனியாவிடமே தான் சொல்ல வேண்டியதை சொல்கிறார். இதனால் எழில் அம்மா பேசாத காரணத்தை கேட்டு தொல்லை செய்கிறார். ஆனாலும் பாக்கியா பேசவில்லை. பின்னர் ராதிகா பாக்கியாவின் கேட்டரிங் பிசினஸ் நடக்கும் இடத்திற்கு நேரில் வந்து பார்க்கிறார். அப்போது ராதிகா திருமணம் செய்து கொள்ளப்போகும் நபர் குறித்து செல்வி ஆர்வமாக கேட்கிறார். இதனால் பாக்கியா அவரை சத்தம் போட்டு அடக்கி வைக்கிறார்.

ஜீவாவை மீண்டும் குடிக்க வைக்கும் கைலாஷ், முல்லையை பரிகாரத்திற்கு கோயிலுக்கு அழைக்கும் கஸ்தூரி – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நிகழ்வுகள்!

இரவு வீட்டிற்கு வந்த பிறகும் பாக்கியா தன்னிடம் பேசாமல் இருப்பதால் எழில் மீண்டும் போய் பேசுகிறார். அப்போது நீ அப்பா இல்லாமல் ஒன்றும் இந்த அளவிற்கு வளர்ந்து இருக்க முடியாது. போய் மன்னிப்பு கேள் என்று பாக்கியா சொல்கிறார். இதனால் வேறு வழியில்லாமல் எழில் அனைவரும் இருக்கும் போது வந்து கோபியிடம் மன்னிப்பு கேட்கிறார். தாத்தா எழிலிடம் கோபியை பற்றிய உண்மையை பாக்கியாவிடம் கூற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!